News April 8, 2025
மாநில அரசு சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும்

அரசியலமைப்பின் பிரிவு 200ன் படி கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல; பொதுவான விதியின்படி கவர்னர் என்பவர் மாநில அரசின் உதவி & ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் ஆகிய 3 முடிவுகளை மட்டுமே கவர்னர் எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 10, 2025
வரும் 31-ம் தேதிக்குள் இதெல்லாம் செஞ்சிடுங்க!

இந்த விஷயங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தவறாமல் முடித்து விடுங்கள். ✱பான் ஆதார் இணைப்பு ✱2024–25 நிதியாண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ✱மலிவு விலையில் வீடு கட்டி கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பித்து விடுங்கள் ✱இவற்றுடன் 2025–26 நிதியாண்டுக்கான 3-ம் தவணைக்கான Advance Tax செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.
News December 10, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் OPS

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எண்ணுவதாக OPS தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிணைவது குறித்து பொதுக்குழு நடத்துவோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். EPS தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் <<18520304>>நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில்<<>> ஒன்றிணைப்பு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
News December 10, 2025
அதிமுக கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதித் துறைக்கே சவால் விடும் திமுக அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் ➤விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ➤கோவை, மதுரை மெட்ரோவுக்கு அனுமதி வேண்டும் ➤SIR பணிகளுக்கு வரவேற்பு ➤TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


