News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: PM

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா அஞ்சாது என PM மோடி கூறியுள்ளார். நம் சகோதரிகளின் குங்குமத்தை அகற்றிய பாக். பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்ததாகவும், இந்திய ஆயுதப் படைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத தாயின் பாதுகாப்புக்கு நாடு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும் PM குறிப்பிட்டார்.
News September 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 18, 2025
GBU விவகாரம்: இளையராஜா பதிலளிக்க உத்தரவு

இளையராஜா தாக்கல் செய்த காப்பிரைட் மனு காரணமாக, Netflix தளத்திலிருந்து ‘குட் பேட் அக்லி’ படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இனி படத்தில் மாற்றங்கள் செய்தால் மீண்டும் சென்சார் போர்டில் அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை HC-ல் பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதனையடுத்து, இதற்கு இளையராஜா பதிலளிக்க கூறி, செப்.24-க்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.