News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 27, 2025
மீண்டும் வலுப்பெற்றது.. இன்று மழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கை & இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் & ஆந்திர கடலோர பகுதிகள் வழியாக நகரும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
News November 27, 2025
D55 ஷூட்டிங் எப்போது? அசத்தல் அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ‘D 55’ படத்தின் ஷூட்டிங் 2026, ஜனவரியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாரி 2’ படத்திற்கு பிறகு சாய் பல்லவி, தனுஷுடன் ஜோடி சேரவுள்ளார். மேலும், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை Netflix தளம் வாங்கியுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஷூட்டிங் முன்பே வியாபாரத்தை தொடங்கியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
News November 27, 2025
1 நிமிடம் இதை படியுங்கள்… இத செய்யவே செய்யாதீங்க!

இரவுநேரம் வந்துவிட்டாலே மொபைல் அல்லது டிவி பார்ப்பது நம் வழக்கமாகிவிட்டது. மொபைல், டிவி தொடர்ந்து பார்க்கும்போது, அவற்றில் இருந்து வெளியாகும் நீல ஒளி, உங்கள் மூளையை கிளர்ச்சியடைய செய்து, இன்னும் பகல்நேரம் தான் உள்ளது என்பதுபோல் காட்டுகிறது. இதனால், தூக்கத்துக்கு காரணமான மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பை தடுத்து, உறக்கத்தை கெடுத்து, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முக்கிய தகவலை SHARE பண்ணலாமே.


