News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 22, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
மந்த நிலையில் சர்வதேச தங்கம் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடிக்கிறது. கடந்த 30 நாள்களில் 1 அவுன்ஸ்(28g) $68(1.67%) சரிந்துள்ளது. இதனால் தான் நம்மூரில், இம்மாதம் தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி, ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இதனிடையே, இன்று(நவ.22) பெரிய அளவில் மாற்றமின்றி 1 அவுன்ஸ் $4,065-க்கும், வெள்ளி $0.55 குறைந்து $50-க்கும் விற்பனையாகிறது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News November 22, 2025
ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.


