News May 15, 2024
இனியும் அரசு உறங்கக் கூடாது

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 19, 2025
ஆண்களே.. உங்கள் தலைமுடி கொட்டுகிறதா?

இன்றைக்கு ஆண்களின் பெரிய கவலைகளில் ஒன்று தலைமுடி உதிர்வாகும். இதனால் இளம் வயதிலேயே வழுக்கை விழலாம், தோற்றத்திலும் வசீகரம் குறையும். இதற்கு பரம்பரை சார்ந்த அம்சமும் காரணம் என்றாலும், நமது அன்றாட பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்கின்றனர் டெர்மடாலஜிஸ்ட்கள். இதை தடுக்க உதவும் எளிய வழிகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 19, 2025
2-வது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்

கழுத்து வலி காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. அப்பிரச்னைக்கு சிகிச்சை பெற்று ஹாஸ்பிடலில் இருந்து கில் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தார். எனினும், அவரை டாக்டர்கள் குழு கண்காணிப்பதாகவும், பூரண குணமடைவதை பொருத்தே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் BCCI தெரிவித்துள்ளது. கில் விளையாட முடியாமல் போனால் கேப்டனாக பண்ட் செயல்பட வாய்ப்புள்ளது.
News November 19, 2025
இந்தியாவின் ‘Most Wanted கேங்ஸ்டர்’ பிடிபட்டார்!

இந்தியாவின் Most Wanted குற்றவாளியான அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று டெல்லி வந்தடைந்தார். பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் மீது, சித்து மூஸ் வாலா கொலை, சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. அன்மோலை கைது செய்த NIA குழு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.


