News September 25, 2024
இறக்குமதி கொள்கையை டிச.,31 வரை நீட்டித்த அரசு!

லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதன வன்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி மேலாண்மை முறையை DGFT டிச. 31 வரை நீட்டித்துள்ளது. அதன் அறிக்கையில், “2025 ஜனவரி முதல் இறக்குமதி செய்யவுள்ள நிறுவனங்கள் தங்களது இறக்குமதியின் அளவு & மதிப்பை அரசிடம் பதிவு செய்து, புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, அவற்றுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.26-ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு, திமுக MP வில்சன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 24, 2025
என்னை மிரட்டிய பவுலர் யார்? ருதுராஜ் கெய்வாட் பதில்

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டிரெண்ட் போல்ட் என பதிலளித்துள்ளார்.
News August 24, 2025
உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.