News September 28, 2025

அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியவில்லை: அண்ணாமலை

image

திமுக அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியாமல் விஜய் மீது பழியை போட விரும்புவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யை காண சிறிய இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே நெரிசலுக்கு காரணம் என காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது என்றார். அப்படி எனில், சென்னை மெரினாவில் கடந்தாண்டு நடந்த ஏர் ஷோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, 5 பேர் பலியானது ஏன்? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News September 28, 2025

ரஜினியை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்

image

விஜய்யின் அரசியல் பயணத்தில், நேற்று நடந்த துயர சம்பவம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு கொள்கை முக்கியமல்ல, தங்கள் நாயகனை ரசிப்பது மட்டுமே முதன்மை. அதனாலேயே நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறினாலும், ரசிகர்கள் ரசிகர்களாகவே தொடர்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால் தான், பழுத்த அனுபவம் கொண்ட கட்சிகளுடன் எதற்கு போட்டி என ரஜினி ஒதுங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

News September 28, 2025

IND vs PAK போட்டியை பார்க்க கூடாது: உத்தவ்

image

தேசப்பற்று உள்ளவர்கள் IND vs PAK இறுதிப்போட்டியை காண்பதை தவிர்க்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். கடினமான நிலப்பரப்பில் இந்திய ராணுவத்திற்கு சோலார் டெண்ட் அமைத்து கொடுத்து உதவிய சோனம் வாங்சுக், தேச துரோகி எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தான் உடன் விளையாடுவது எந்த வகையான தேசப்பற்று என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 28, 2025

RSS-ஐ புகழ்ந்து பேசிய PM மோடி

image

மனதில் குரல் நிகழ்ச்சியில் PM மோடி RSSஐ புகழ்ந்து பேசியுள்ளார். நாட்டில் எங்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், அங்கு முதலாவதாக செல்வது RRS அமைப்பினர் என்றும் தியாகம், தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கம் ஆகியவை RSS-ன் உண்மையான பலம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேசத்திற்கு சேவை செய்திட தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று PM மோடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!