News April 29, 2025

ஆட்டம் இன்னும் முடியல! CSK பிளே-ஆஃப் போக முடியும்!

image

இந்த வருஷம் எல்லாமே CSK-க்கு எதிரா இருக்கு. இதுவரை, 9 மேட்சில் 2-ல் மட்டுமே ஜெயிச்சிருக்காங்க. இனி எங்க பிளே-ஆப் போறது என நம்பிக்கை இழக்க வேண்டாம். யாரோ ஒரு முரட்டு CSK ஃபேனின் கால்குலேஷன் 2-வது படத்தில் பாருங்க. மீதி இருக்கும் 5 மேட்சும் CSK ஜெயிச்சு, மத்த டீம்ஸ், இதுல இருக்குற படி மத்த டீம்களின் மேட்ச் முடிஞ்சா போதும்! CSK பிளே-ஆப் போயிடலாம். இதெல்லாம் ஓகேதான். ஆனா CSK ஜெயிக்கணுமே?

Similar News

News April 29, 2025

IPL லாபத்தில் 10 IIT-கள் கட்டலாம்: ஷாக் ரிப்போர்ட்

image

3 ஆண்டுகளில் IPL லாபத்திற்கு 40% வரி விதிக்கப்பட்டிருந்தால் ₹15,000 கோடி கிடைத்திருக்கும், இதன் மூலம் 10 ஐஐடிக்கள் (அ) தேசிய உள்ளார்ந்த தொழில்நுட்ப நிதியை உருவாக்கியிருக்கலாம் என IISc பெங்களூரு பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். IPL டீம் உரிமையாளர்கள் கூடுதலாக ₹480 கோடி வரை ஈட்டியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ₹6,000 கோடியை ஆராய்ச்சி பணிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

பாக். பேரழிவை சந்திக்கும்.. தீர்க்கதரிசி கணிப்பு

image

பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவரது கணிப்புகள் 85% துல்லியமாக பலித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா-பாக். இடையே பதற்றம் நிலவும் நிலையில், 2025-ல் பாக். பேரழிவை சந்திக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இதனால் நிச்சயம் இந்தியா-பாக். போர் மூளும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதெல்லாம் சும்மா என இன்னொரு தரப்பினர் மறுக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 29, 2025

BSF வீரரை மீட்பது எப்போது? காங். கேள்வி

image

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை(BSF) வீரரை மீட்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என காங். கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்.23-ல் ஃபெரோஸ்பூர் அருகே எல்லை தாண்டியதாக கூறி, பூர்ணம் சாஹு என்ற BSF வீரர் பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பஹல்காம் தாக்குதலால் சாஹுவை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!