News April 5, 2025
ஆட்டம் காணும் பஞ்சாபின் அடித்தளம்

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 ரன்களிலும் மற்ற இருவர் தலா 0 & 1 ரன்களிலும் வெளியேறினர். 4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 31/3 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News September 17, 2025
சற்றுமுன்: விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டார்

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு டஃப் கொடுக்கும் வகையில், ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தவெகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பிரத்யேக செயலியை அவர் வெளியிட்டிருந்தார். தற்போது, உறுப்பினர் சேர்க்கைக்காக 234 தொகுதிகளுக்கும் தலா 8 நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். 2 கோடியை எட்டுமா?
News September 17, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டில் பரபரப்பு

சென்னையில் உள்ள EPS வீட்டில் இரவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதுதான். DGP அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதன் அடிப்படையில், மோப்பநாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், அது புரளி என தெரிய வந்தது. கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
News September 17, 2025
GST-ல் மாற்றத்தால் மக்களிடம் பணம் புரளும்: FM

GST வரி விதிப்பில் செய்துள்ள மாற்றங்களால் மக்களின் கைகளில் பணம் புரளும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். GST சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தை ₹2 லட்சம் கோடி வரை மேலும் உயர்த்தும் என்றும், இதனால் சாமானியர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் UPA அரசாங்கம் வரி பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், ஒரே நாடு ஒரே வரி முறையை செயல்படுத்த தவறியதாகவும் FM குற்றஞ்சாட்டினார்.