News May 20, 2024

மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு

image

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரை திரும்பும்படி வானிலை மையம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், இன்று முதல் 24ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடலில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும், ஆதலால் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News August 13, 2025

5,180 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

SBI வங்கியில் காலியாக உள்ள 5,180 Junior Associates (கிளார்க்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல். தேர்வுக் கட்டணம்: ₹750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News August 13, 2025

M.A. பகவத் கீதை படிக்க தயாரா?

image

M.A. பகவத் கீதை படிப்பை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய கலாசாரத்தை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டப்படிப்பை கற்பதன் வழியாக தலைமைத்துவம், முடிவெடுக்கும் திறன், சமூக அரசியல் அம்சங்களை மாணவர்கள் அறிய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News August 13, 2025

உரிமைத் தொகை.. ஆகஸ்ட் 28ல் காத்திருக்கும் குட் நியூஸ்!

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற விவரத்தையும் விரைவில் அரசு வெளியிடுமாம். SHARE IT.

error: Content is protected !!