News May 21, 2024
விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சொகுசு காரை மது போதையில் சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஓட்டி, இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் 15 மணி நேரத்தில் ஜாமின் பெற்றது சர்ச்சையானது. இந்நிலையில், அச்சிறுவனின் தந்தையை போலீசார் அவுரங்காபாத்தில் கைது செய்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக் கடையின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
மனைவியின் குடும்பப் பெயரை கணவர்கள் வைக்கலாம்

இந்தியாவில் திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப் பெயரை தன் பெயருக்கு பின் வைப்பது வழக்கம். இதனை சுற்றி பல விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது, கணவர்கள் தங்கள் மனைவியின் குடும்பப் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொள்வது சட்டப்படி செல்லும் என அறிவித்துள்ளது. ஆண்களே, இந்தியாவில் இந்த சட்டம் வந்தால் உங்கள் பெயரை மாற்றிக்கொள்வீர்களா?
News September 14, 2025
திராவிட மாடலை ஆராயும் வட இந்திய யூடியூபர்கள்: ஸ்டாலின்

2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், வட இந்திய யூடியூபர்கள் திராவிட மாடலை ஆராய்ந்து, அதனை அவர்களது மாநிலங்களில் செயல்படுத்த அறிவுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் என்றார்.
News September 14, 2025
EPS கையெழுத்திட்டதில் கால்வாசி கூட வரவில்லை: CM

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் பாதிகூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி அரசு நிகழ்வில் பேசிய அவர், EPS கையெழுத்திட்ட முதலீடுகளில் கால்வாசி கூட வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், திமுக ஆட்சி அமைந்தபிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 77% செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.