News April 15, 2024
அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுகிறது

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ANI ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புவதாகக் கூறப்படுவதை மறுத்தார். நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது எனது உள்துறை அமைச்சரை சிறைக்கு அனுப்பினார்கள். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 3% மட்டுமே அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் என்றார்.
Similar News
News November 27, 2025
கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 27, 2025
Sports 360°: இன்று WPL வீராங்கனைகள் ஏலம்

*சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. * WPL வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. *சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழகத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. *Under-17 ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. *டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.
News November 27, 2025
கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


