News May 17, 2024
ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 8, 2025
போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையிடவில்லை: ராஜ்நாத் சிங்

தானே இந்தியா-பாக்., போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தம் இந்தியா – பாக்., இடையில் மட்டுமே இருந்ததாகவும், எந்த 3-ம் தரப்பினரும் மத்தியஸ்தத்தில் ஈடுபடவில்லை எனவும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாக்.,-யிடம் இருந்து போரை நிறுத்த தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தான், சண்டை நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 8, 2025
பெருங்குடல் புற்றுநோய்; இந்த உணவுகளை தவிருங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் மோசமான உணவு பழக்கத்தால், இளைஞர்களை கூட பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக பாதிக்கிறது. இதை முன்பே கண்டறியாமல் விட்டால் உயிரையே கொள்ளும். இதனை தடுக்க சில உணவுகளை அடிக்கடி உண்பதை நாம் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அது என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் நலமாக இருக்க SHARE THIS.
News November 8, 2025
BREAKING: ரஜினிகாந்த் அண்ணனுக்கு மாரடைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை பெங்களூருவில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். தனது சகோதரர் சீரியஸாக இருப்பதை அறிந்ததும், அவரை சந்திக்க ரஜினி பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சினிமா கரியரில் ரஜினியை வழிநடத்திய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


