News May 17, 2024
ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 8, 2025
கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 8, 2025
விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
இரவில் பெண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

இன்றைய சூழலில், நாம் எந்த கேள்விக்கும் பதில் தேடி, முதலில் ஓடுவது கூகுளிடம் தான். முக்கியமாக, இரவு தூங்கும் முன் ஸ்மார்ட்போனில் எதையாவது தேடிப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோரிடம் அதிகரித்துள்ளது. வேலைப்பளு, வீட்டு வேலைகள் என நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கும் பெண்கள், இரவில் தூங்குவதற்கு முன் அதிகம் தேடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? எதிர்பாராத சுவாரஸ்யமான பதில்களை மேலே SWIPE பண்ணி பாருங்க.


