News May 17, 2024
ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 8, 2026
தணிக்கை குழுவினர் மோசமானவர்கள் அல்ல: சுதா

தணிக்கை பிரச்னையில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், சென்சார் போர்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், தணிக்கை குழுவினர் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என ‘பராசக்தி’ இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ‘பராசக்தி’ படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை என்றும், படத்தை அவர்கள் ரசித்ததாகவும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
அதிமுகவில் OPS இல்லை.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுகவில் OPS, சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பேசியபின், EPS தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் TTV தினகரன் இடம் பெறுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக கூறியுள்ளார். இதனால், NDA கூட்டணியில் TTV-யை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
அந்த 3 State-ல பிறக்கலனா.. இந்திய அணியில் கஷ்டம்!

NZ தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராபின் உத்தப்பாவின் பேட்டி ரசிகர்களிடம் பேசும் பொருளாகியுள்ளது. இந்திய அணியில் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என குறிப்பிட்ட அவர், மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 இடங்களில் இருந்து வராமல் போனால், வீரர்கள் கூடுதலாக போராட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?


