News May 17, 2024

ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

image

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 4, 2025

Audio Launch-க்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ‘பராசக்தி’ டீம்

image

பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தியும் மோதுகின்றன. ஏற்கெனவே ஜனநாயகனின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் ‘பராசக்தி’ ஆடியோ லான்ச்சுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சியை SK-வின் சொந்த ஊரான திருச்சி அல்லது மதுரையில் நடத்த அவர்கள் பிளான் போட்டு வருகின்றதாக சொல்லப்படுகிறது.

News December 4, 2025

இந்தியா தோல்விக்கு இதுதான் காரணமா?

image

358 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மார்க்ரம் 53 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறியதோடு, ரன்களையும் வாரி வழங்கினர். அர்ஷ்தீப், ஜடேஜா மட்டுமே SA பேட்டர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினர். SA அணியின் பேட்டிங் டெப்த்தையும் இந்தியா கணிக்க தவறிவிட்டது.

error: Content is protected !!