News May 17, 2024

ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

image

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 2, 2025

85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி.. சீமான் காட்டம்

image

முதுநிலை ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததுதான், 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்வெழுதிய பல இளைஞர்கள் தமிழ் சரிவர தெரியாமலேயே பட்டம் பெற்றது கொடுமை என்றும் அவர் கூறியுள்ளார். இதை சரிசெய்திட பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் கற்பித்து, தேர்வு நடத்துவதை அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 2, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது

image

11 பேர் உயிரிழந்த டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் பல டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், அல் பலா பல்கலை. நிறுவனர் ஜவாத் அகமதை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News December 2, 2025

கலிலியோ பொன்மொழிகள்!

image

*எல்லா உண்மைகளையும் அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் புரிந்து கொள்வது எளிமையானது. அவற்றைக் கண்டுபிடிப்பதே முக்கியமான விஷயம். *அளவிடக்கூடியதை அளவிடுங்கள். அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள். *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம். *அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே. ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே. *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.

error: Content is protected !!