News May 17, 2024
ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
உங்களுக்கு வரும் SMS-ல் P, S, T, G என்று உள்ளதா?

உடனே உங்க போனை எடுத்து செக் பண்ணுங்க. வந்துள்ள அனைத்து மெசேஜ்களிலும் P, S, T, G ஆகிய எழுத்துகளில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும் ★P (Promotional)- விளம்பரச் மெசேஜ் ★S (Service)- சேவை தொடர்பான மெசேஜ் ★T (Transactional)- பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ் ★G (Government)- அரசு சார்ந்த மெசேஜ். பொதுமக்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானதா அல்லது மோசடியானதா என்பதை அறிய இது உதவும்.
News December 5, 2025
ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயார் காலமானார்

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தயார் சிமோன் டாடா (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெனிவாவில் பிறந்த சிமோன், 1955-ல் நாவல் டாடாவை திருமணம் செய்தார். Lakmé, Trent Ltd உள்ளிட்ட பிராண்ட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். #RIP
News December 5, 2025
சற்றுமுன்: விடுமுறை.. 3 நாள்களுக்கு ஹேப்பி நியூஸ்

வார விடுமுறையையொட்டி இன்று முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா?


