News March 21, 2024
மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து
கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
ராகு-கேது பெயர்ச்சி: 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

மே மாதம் ராகு கிரகம் கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றனர். சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி ஆவது மேஷம், மிதுனம், கடகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பண லாபம், முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் என பல நல்ல விஷயங்கள் நடக்கலாம் என கூறுகின்றனர்.
News April 18, 2025
அன்றும் இன்றும் ஒரே கேப்டன்.. ஒரே தல..

இன்று உலகளவில் கொண்டாடப்படும் IPL 2008-ல் இதே நாளில் தான் தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. அன்று கேப்டனாக அறிமுகமான பலர் இன்று பயிற்சியாளர்களாகவும், கமெண்டேட்டர்களாகவும் மாறிவிட்டனர். அன்றும் இன்றும் கேப்டனாக இருப்பவர் தல தோனி மட்டுமே. 18 ஆண்டுகளாக சென்னை அணியை தோளில் சுமந்து வருகிறார் தோனி.
News April 18, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.