News October 20, 2024

உலகப்புகழ் பெற்ற கோயிலில் திருடிய டாக்டர்

image

உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த வியாழக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் வெண்கலத்தால் ஆன தட்டு திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஹரியானாவில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் என தெரியவந்துள்ளது. அவர்களிடன் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News July 5, 2025

இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?

News July 5, 2025

தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து PK விலகல்

image

விஜய்யின் தவெகவிற்கான அரசியல் ஆலோசனைக் குழுவில் இருந்து பிரசாந்த் கிஷோர் (PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தனது (ஜன் சுராஜ்) கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்துவதால் விலகியுள்ளார். நவம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் இடம் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 5, 2025

TVK கோரிக்கை ஏற்க HC மறுப்பு..!

image

இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பை கண்டித்து தவெக சார்பில் ஜுலை 3யில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரி HC-யை நாடியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாள்களுக்கு முன்பே போலீசாரிடம் மனு வழங்க வேண்டும் என்றனர். இதனால் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு மனு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!