News April 30, 2024
திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது

சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதென கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய முருகன், ST/SC மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar News
News November 19, 2025
விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டவர்: அப்பாவு

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்று பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.
News November 19, 2025
டிஜிட்டல் தங்கத்தின் விலை 61% குறைவு

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம் என சொல்லி டிஜிட்டல் தங்க விற்பனையை அதிகரித்தன. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை ₹1,410 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முதலீடு ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் மக்களை எச்சரித்தனர். இதனால் அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்க விற்பனை ₹550 கோடியாக சரிந்துள்ளது.
News November 19, 2025
மேகதாது விவகாரத்தில் CM-க்கு கவலையில்லை: RB உதயகுமார்

மேகதாது அணை விவகாரத்தில் CM ஸ்டாலின் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது விவகாரத்தை பற்றி கவலைப்படாமல், SIR-க்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தனது சகோதரரான ராகுல்காந்தி மூலம் சித்தராமையாவுக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


