News April 16, 2024
இந்த நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழப்பு

தமிழகத்தில் சர்க்கரை நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பது பொது சுகாதார இயக்குநரக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2015இல் பலியான ஆண்களின் சராசரி விகிதம் 3.4%ஆகவும், பெண்களின் விகிதம் 5%ஆகவும், 2021இல் ஆண்களின் விகிதம் 4%ஆகவும், பெண்களின் விகிதம் 4.3%ஆகவும் இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு, பெண்களுக்கு குறைவாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News November 6, 2025
டிரம்ப் – மோடி அடிக்கடி பேசுகின்றனர்: USA White House

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News November 6, 2025
மனம் உடைந்து வேதனையுடன் பேசிய ராமதாஸ்

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; மற்றொன்று கட்சித் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர், அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள்; அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் என மனம் உடைந்து பேசினார்.
News November 6, 2025
இதெல்லாம் வந்தா இனி மனிதர்களுக்கு சாவே இல்லை!

மனிதன் சாகா வரம் பெற முடியுமா (அ) இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் பல காலமாக நடக்கிறாது. அதன் விளைவாக பல கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் அந்த ஆராய்ச்சிகள் வெற்றியை கண்டுவிட்டால் மனிதர்களால் சாகாமல் பல நூற்றாண்டுகளுக்கு வாழமுடியுமாம். அது என்னென்ன ஆராய்ச்சிகள் என்பதை தெரிந்துகொள்ள போடோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுக்கு எவ்வளவு நாள் வாழ ஆசை?


