News October 29, 2025

மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

image

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?

Similar News

News October 29, 2025

அதிமுகவில் இணைந்தனர்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கரூரில் EX அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக்கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். கடந்த 9-ம் தேதி கரூரை சேர்ந்த ADMK நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM-ல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்து சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் ADMK தரப்பு புதிய போட்டோ வெளியிட்டுள்ளது.

News October 29, 2025

அப்புறம் எதுக்கு இந்த ஆதார்?

image

பேங்க் அக்கவுண்ட் வேலை செய்யாது, ரேஷனில் பொருள் கிடைக்காது என எச்சரிக்கை செய்து, ஆதாரை எல்லா அடையாள சான்றுகளுடனும் இணைக்க வைத்தனர். ஆனால், தற்போது ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே, அதை குடியுரிமை, DOB, வசிப்பிடம் போன்றவற்றுக்கு உறுதியான சான்றாக பார்க்கப்படாது என ECI விளக்கமளித்துள்ளது. அப்போது ஏன் ஆதாரை வலுக்கட்டாயமாக இணைக்க வைத்தீர்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News October 29, 2025

மின்சார பஸ்களால் அரசுக்கு நஷ்டமா? அமைச்சர் விளக்கம்

image

மின்சார பஸ்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கியதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மின்சார பஸ்ஸின் விலை அதிகம் என்பதால் தனியார் மூலம் கொள்முதல் செய்ததாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை என்ற புரிதல் இல்லாமல் அதிமுக பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!