News October 7, 2025
பல மாதங்களுக்கு முன்பே ரோஹித்தை நீக்க முடிவு

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க எடுத்த முடிவு எப்போதோ எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியது. மேலும் அஜித் அகர்கர் ரோஹித்திடம் இதுதொடர்பாக பல மாதங்களுக்கு முன்னேரே பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை மிகவும் ரகசியமாக வைத்து, இப்போது எடுக்கப்பட்ட முடிவுபோல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. திட்டத்தை வகுத்ததில் அஜித் அகர்கருக்கும், கம்பீருக்குமே முக்கிய பங்கு உள்ளதாம்.
Similar News
News October 7, 2025
விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
News October 7, 2025
ராமதாஸை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ராமதாஸின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார். தற்போது ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 7, 2025
இந்திய அணியின் தோல்விக்கு இது காரணமாகலாம்: கைஃப்

ரோஹித் சர்மாவை ODI கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, கில்லிடம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கில் இதற்கு ஒப்புக்கொண்டதாக Ex இந்திய வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். இது அணியின் தோல்விக்கு வழிவகுக்கும் என்ற அவர், 2027 WC-க்கு பின் கில்லுக்கு இவ்வாய்ப்பினை வழங்கியிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.