News August 28, 2025
உயிரிழந்த தவெக தொண்டர்… உதவிக்கரம் நீட்டிய தலைமை

விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, கூடுதல் உதவிகளை செய்ய தயார் எனவும் உறுதியளித்தனர்.
Similar News
News August 28, 2025
Beauty: முடி நிக்காம வளரணுமா? இதை செய்து பாருங்க..

உங்களுக்கு முடி உதிர்வு, இளநரை, வறண்ட முடி, பொடுகு தொல்லை என அனைத்தும் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஒரேயொரு பொருளை வைத்து சரி செய்யலாம். அதுதான் அன்னாசி பூ. ▶முதலில், அன்னாசி பூவை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ▶அதை தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள் ▶வடிகட்டிய பிறகு அந்த எண்ணையை வாரத்திற்கு இருமுறை தலைக்கு பயன்படுத்துங்கள். SHARE.
News August 28, 2025
சீன வீராங்கனையை சிதறவிட்ட சிந்து

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் Wang Zhi Yi-ஐ எதிர்கொண்ட அவர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இத்துடன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிந்து ஒரு முறை கூட சீனா வீராங்கனைகளிடம் தோற்றதில்லை என்ற சாதனை நீடிக்கிறது.
News August 28, 2025
நல்லகண்ணு நலம்பெற விரும்புகிறேன்: CM ஸ்டாலின்

சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கேட்டறிந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.