News June 27, 2024

பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Similar News

News September 16, 2025

இந்தியா முழுவதும் SIR? அக்.7-ல் தீர்ப்பு

image

பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்த (SIR), நடைமுறைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதை முழுமையாக ரத்து செய்ய நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வரும் அக்.7-ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அது இந்தியா முழுமைக்கும் SIR மேற்கொள்ளப்படுமா என்பதற்கான உத்தரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

image

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதை இன்று ஒருநாள் மட்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்று கடைசி நாள் என்பதால், ஒரேநாளில் அதிகமானோர் தாக்கல் செய்ய முனைப்பு காட்டினர். இதனால், வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கியது. அதன் காரணமாக, இன்று ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 7.3 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளனர்.

News September 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

error: Content is protected !!