News June 27, 2024
பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Similar News
News November 22, 2025
டாக்டர் Fish பற்றி உங்களுக்கு தெரியுமா?

டாக்டர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் மீன்கள் கூட நமக்கு சிகிச்சை அளிக்கும். எந்த மீன் என யோசிக்கிறீர்களா? மீன் ஸ்பாக்களுக்கு சென்றால் காலை கடிக்க விடப்படும் Garra rufa மீன்களே அவை. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. உதடுகள் மூலமே இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
News November 22, 2025
தனுஷின் திறமைக்கு ரசிகை: கீர்த்தி சனோன்

தனுஷின் திறமைக்கு நான் ரசிகை என கீர்த்தி சனோன் கூறியுள்ளார். பல படங்களை இயக்கியிருப்பதால் காட்சிகள் எப்படி திரையில் வெளிப்படும் என்ற புரிதல் தனுஷுக்கு இருப்பதாகவும், பல நுணுக்கங்களை அறிந்திருக்கும் தனுஷுடன் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்ல சீன்களை நடித்து முடித்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
புதிய பிரசாரத்தை முன்னெடுக்கும் சீமான்

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


