News June 27, 2024
பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Similar News
News November 22, 2025
BREAKING: இங்கெல்லாம் கனமழை கொட்டும்.. ALERT

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த <<18348127>>தாழ்வு பகுதி உருவாகக்கூடும் <<>>என IMD தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News November 22, 2025
மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது: வைகோ

மத்திய அரசு படுமோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் அறிக்கையை மட்டும் ரத்து செய்து மத்திய அரசு ஓரவஞ்சமாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக தேர்தலில் எளிதாக வெற்றி பெற இது பிஹார் இல்லை தமிழ்நாடு என்றும் கூறியுள்ளார்.
News November 22, 2025
டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று, கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடத்த முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்ததால், தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் கில் இடத்தில் சாய் சுதர்சனம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


