News June 27, 2024

பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Similar News

News November 21, 2025

இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

image

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

Sports Roundup: கால்பந்து தரவரிசையில் இந்தியா சறுக்கல்

image

*சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திற்கு சறுக்கல். * நவ.27-ம் தேதி நடைபெறவுள்ள WPL கிரிக்கெட் ஏலத்திற்கு 277 வீராங்கனைகள் பதிவு. *ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். *டி20-ல் 19 முறை ஆட்டநாயகன் விருது வென்று சிகந்தர் ராசா சாதனை. *ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில், லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

News November 21, 2025

ஒரு நாள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

விடுமுறை இல்லாமல் SIR பணிகளை மேற்கொள்ளும் BLO-க்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கேரளா, மேற்கு வங்கத்தில் BLO-க்கள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால், பணிச்சுமையைக் குறைக்க MGNREGA பணியாளர்களை உதவிக்கு பயன்படுத்தி கொள்ளவும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SIR பணிகளை முடிக்க டிச.4-ம் தேதி கடைசி நாளாகும்.

error: Content is protected !!