News June 27, 2024

பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Similar News

News December 8, 2025

‘பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000’

image

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுத்தால் பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்கலாம் என EPS தெரிவித்துள்ளார். KN நேரு ₹1,020 கோடி வரை <<18501393>>ஊழல் செய்ததாக ED கூறியுள்ளதை<<>> சுட்டிக்காட்டி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வலியுறுத்தியிருந்தார். பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

News December 8, 2025

இதை விட கேவலமான விஷயம் இல்லை: அமைச்சர்

image

உலகத்திலேயே சொந்தமாக ஏர்லைன்ஸ் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதை விட கேவலமான விஷயம் ஒன்று இல்லை என விமர்சித்த அவர், இங்கிருக்கும் மதுரைக்கு செல்ல ₹50 ஆயிரம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பிளைட் வேண்டாம் என டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரயில், பஸ்ஸில் செல்ல அவர் முடிவெடுத்ததாகவும் அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

News December 8, 2025

கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

image

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!