News March 20, 2024
கட்டடம் இடிந்த விபத்தில் பலி 10 ஆக உயர்ந்தது

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 15, 2025
முறையற்ற உறவு விவகாரத்தில் பிரபல மாடல் மேக்னா கைது!

ஏற்கனவே திருமணமான சவுதி அரேபிய நாட்டுத் தூதருடன் தகாத உறவில் இருந்த பிரபல மாடல் அழகி மேக்னா ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக மேக்னா ஆலம் பேஸ்புக்கில் LIVE வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சிலர் தன்னை சமாதானம் செய்ய முயன்றதாகவும் கூறி அவர்களையும் சிக்க வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
News April 15, 2025
மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக்குழு: CM

மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். இக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், அடுத்த 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் வழங்கும் என கூறினார். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
News April 15, 2025
CSK அணியில் இனி அஷ்வினுக்கு இடமில்லையா?

CSK அணியில் அஷ்வின் சொதப்பி வருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த தோனி, ‘அஷ்வினுக்கு நாங்கள் அதிக அழுத்தம் கொடுத்துவிட்டோம்’ என தெரிவித்துள்ளார். பந்துவீச்சை மாற்றி அமைத்தது பலனளித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், வரும் போட்டிகளில் அஷ்வினுக்கு இடமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?