News June 26, 2024
விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 61ஆனது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் நேற்று வரை 59 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், இன்று காலை ஏசுதாஸ் என்பவரும், அவரைத் தொடர்ந்து ரஞ்சித்(37) என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Similar News
News March 2, 2026
கோவை: அதிமுகவில் இணைந்த தவெகவினர்

கோவை வடக்கு தொகுதி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ அம்மன் K.அர்ச்சுணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், பகுதி செயலாளர் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இணையும் நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


