News September 4, 2025
ஐகோர்ட் விதித்த கெடு.. மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை வரும் நவ.30-க்குள் TN முழுவதும் அமல்படுத்த ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் 98.09% பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாகவும், திரும்ப பெறும் பாட்டில்களுக்கு ₹10 கூடுதலாக விற்பனை செய்ததன் மூலமாக ₹17.86 கோடி வசூலானதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது 15 மாவட்டங்களில் உள்ள இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமலாக உள்ளது.
Similar News
News September 7, 2025
அதிமுகவை கூறு போட்ட பாஜக: உதயநிதி

சென்னை கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய DCM உதயநிதி ஸ்டாலின் வரும் தேர்தலுக்காக முழுவீச்சில் செயல்பட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், அதற்கான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சியை குறித்து பேசிய அவர், அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டதாக DCM உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
News September 7, 2025
இபிஎஸ்-ஐ நாங்கள் நீக்குவோம்: புகழேந்தி

EPS ஒன்றும் அதிமுகவுக்கு சொந்தக்காரர் அல்ல என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து EPS-ஐ இயக்குவதாக சாடினார். அத்துடன், உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் செங்கோட்டையன் பக்கம் நிற்பதாக கூறிய அவர், நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
கழுத்து வலியை விரட்டும் யோகா!

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனத்தை செய்தால், நிவாரணம் கிடைக்கும். இந்த ஆசனம் செய்யும்போது உடல் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்று பெயர்.
*முதலில் நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தவும். *அடுத்து முதுகை பின்னோக்கி வளைக்கவும்.
*மெல்ல கைகளை கால் முட்டியின் பின்புறத்தில் வைக்கவும் *இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.