News August 7, 2025
மனித குலத்தின் இருண்ட நாள்!

1945 ஆகஸ்ட் 6.. மனித இனத்தின் இருண்ட நாள். ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெரும் சத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாம்பலாகின. இதில் உயிரிழந்தோரை விட, உயிரோடு இருந்தவர்களின் வேதனையே பெரிது. அந்த துயரமும், கொடூரமும் யாரும் மன்னிக்கவே முடியாத ஒரு மனிதப்பிழை. இந்த நாளில் மனதில் எழும் ஒரே கேள்வி, இந்த கொடுமையை பார்த்த பிறகும், உலகம் இன்னும் போருக்கு ஏன் ஆயத்தமாகவே இருக்கிறது?
Similar News
News August 7, 2025
இளம் பெண் தற்கொலை.. கணவர் குடும்பத்தோடு கைது

திருப்பூரில் ரிதன்யாவை போல் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதங்களில் பிரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணையாக 120 பவுன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.
News August 7, 2025
ஆசிய கோப்பை: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!

Asia Cup-க்கான அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. ENG தொடரில் காயமடைந்த பண்ட் & Work Load காரணமாக பும்ராவும் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. நீங்க பெஸ்ட் பிளேயிங் XI சொல்லுங்க?
News August 7, 2025
கொலைநாடாக மாறிய தமிழ்நாடு: OPS விளாசல்

TN-ல் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக OPS சாடியுள்ளார். திருப்பூர் SSI கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், மதுவால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.