News March 2, 2025
ரயிலை தவற விட்டவருக்கு நேர்ந்த கொடுமை

டீ குடிக்க ரயிலில் இறங்கிய ஆந்திராவைச் சேர்ந்த அப்பா ராவ், சிவகங்கையில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்த கொடுமை நடந்துள்ளது. அவருக்கு உணவு மட்டும் கொடுத்து ஆடு மேய்க்க விட்டுள்ளார் அண்ணாதுரை என்பவர். மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் வழக்கமான கள ஆய்வுக்குச் சென்ற போது, இது குறித்து தெரியவந்துள்ளது. அப்பாராவை மீட்ட அதிகாரிகள், அவரது குடும்பத்தினரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 12, 2026
TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 12, 2026
BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.
News March 12, 2026
பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


