News September 24, 2025
தாமதமான நீதியின் கொடுமை..

1986-ல் ம.பி., EB Bill Assistant ஜகேஷ்வர் ₹100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-ல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப். 9-ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடிவிட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!
Similar News
News September 24, 2025
உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னைகள் இருக்கா?

குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்தே அவர்களது உடம்பில் சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ➤குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தால் வைட்டமின் சி குறைபாடு இருக்கலாம் ➤Zinc & இரும்பு சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சத்தான உணவுகளை சாப்பிடமாட்டார்கள் ➤முடி உதிர்ந்தால் Zinc & பயோட்டின் குறைபாடு ➤உதடுகள் வறண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News September 24, 2025
ஒருக்கா மட்டும் அண்ணன் பேச்ச கேளு: சீமான்

விஜய்யை எதிர்த்து போட்டியிடவா நான் அரசியல் செய்கிறேன் என்ற சீமான், இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு என விஜய்க்கு அறிவுறுத்திய சீமான், உனக்கு தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்றார். மேலும், திடீரென மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி விஜய் பேசுவது, மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது என்றும் கடுமையாக சாடினார்.
News September 24, 2025
அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. கில், அபிஷேக் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் 3 ஓவர்களுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. தனது அதிரடியான ஆட்டத்தால் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி (60 ரன்கள்) களத்தில் உள்ளார். கில், (29 ரன்கள்), ஷிவம் துபே (2 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.