News March 21, 2025
பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. சிக்கிய தம்பதி!

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸில் சிக்கியுள்ளனர். 2014இல் கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் 16 பேருக்கு 2019இல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ், தமிழரசி தம்பதி வசமாக சிக்கியுள்ளனர்.
Similar News
News July 8, 2025
கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
News July 8, 2025
சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.