News March 15, 2025

மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

image

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News July 4, 2025

₹853 கோடி சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி

image

IIT கான்பூரில் பட்டம் பெற்றவர் திரபித் பன்சால். இந்திய வம்சாவளியான இவர், மெட்டா நிறுவனத்தின் AGI பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய ஆண்டு சம்பளத்தைக் கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆண்டுக்கு ₹853 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதற்கு முன்னதாக பெங்களூரு இந்திய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், கூகுள் & மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களிலும் அவர் பயிற்சிப் பணி பெற்றுள்ளார்.

News July 4, 2025

Padman திரைப்பட பாணியில் காங்கிரஸ் பிரச்சாரம்

image

பெண்களுக்கு நாப்கின் அவசியத்தை வலியுறுத்தி Padman எனும் ஹிந்தி படம் உள்ளது. தற்போது அதைப்போன்ற சம்பவம் பீகாரில் நடைபெறுகிறது. அம்மாநில தேர்தலை முன்னிட்டு சானிட்டரி நாப்கின் கொடுக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் துவங்கியுள்ளது. அந்த நாப்கின் கவர்களில் ராகுல், ப்ரியங்கா படங்கள் உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரத்துடன் இருப்பதை வலியுறுத்தியே இப்பிரச்சாரம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.

error: Content is protected !!