News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.
News December 15, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
News December 15, 2025
காட்டில் வலம் வந்த மாளவிகா

தடோபா-அந்தாரி புலிகள் காப்பகக் காட்டில் சவாரி சென்று மகிழ்ந்த மாளவிகா மோகனன், அதன் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், அவர் கேமராவுடன் வலம் வந்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். திரைப்பட கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியமான, தனித்துவமான பெண்ணாக வலம் வருகிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


