News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
FLASH: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 சீட்டு?

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்துள்ள பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை <<18785984>>உறுதி செய்த EPS<<>>, தொகுதிகள் குறித்த விவரங்களை பின்னர் அறிவிப்போம் என்றார். ஆனால், பாமக தரப்பில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதில், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதாம்.
News January 7, 2026
மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி!

தனக்கு எதிராக பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை HC-ல் நடந்துவரும் வழக்கில், ரங்கராஜின் கோடிக்கணக்கான வியாபாரத்தை பாதிக்கும் வகையில் அவரை பற்றி அவதூறு பரப்பி யூடியூபில் பணம் சம்பாதிப்பதாக வாதிடப்பட்டது. அதற்கு கிரிசில்டா தரப்பு, மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் ரங்கராஜ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டது.
News January 7, 2026
₹1,020 கோடி ஊழல் புகார்.. KN நேரு மீது FIR பதிய மனு

அமைச்சர் KN நேரு மீதான ₹1,020 கோடி புகாரில் FIR பதிவு செய்யக்கோரி HC-ல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. MP இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், நகராட்சி நிர்வாகத் துறையில் நியமனம் மற்றும் ஒப்பந்த விநியோகங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ED அளித்த ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையும், காவல்துறையும் நேரு மீது வழக்குப்பதிய மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.


