News April 7, 2025

சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

image

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

image

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியதற்கு IND வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. PAK-ல் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவது எல்லோருக்கும் தெரியும் என்றும், அங்கு பல மதங்களை சேர்ந்த சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா நோக்கி விரல்களை நீட்டுவதால் அந்த உண்மை மாறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 30, 2025

யார் இந்த கிரிக்கெட் வீரர்? கண்டுபிடியுங்க

image

அயராது உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த போட்டோவில் உள்ள சிறுவன் உதாரணம். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அச்சிறுவன் தனது லட்சியத்தை நோக்கி உழைத்து, தற்போது கிரிக்கெட் உலகில் கலக்கி வருகின்றான். Chinaman பவுலர் என அழைக்கப்படும் அந்த வீரரின் சுழற்பந்துவீச்சை அடிக்கமுடியாமல் ஜாம்பவான் வீரர்கள் கூட தடுமாறுகின்றனர். CSK-விற்காக ஆடுகிறார். யார் அவர்? கமெண்ட்ல சொல்லுங்க

News December 30, 2025

தமிழகத்தில் நிலவும் காட்டு ராஜ்ஜியம்: அண்ணாமலை

image

திருத்தணி சம்பவத்தில் குற்றவாளிகள் கைதாகியிருந்தாலும், பல ரவுடிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், TN-ல் போதைப் பொருள் புழக்கம், வன்முறையை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரம் சர்வ சாதாரணமாகிவிட்டதாக கூறியுள்ளார். நன்றாக இருந்த TN-ஐ காட்டு ராஜ்ஜியமாக மாற்றியதற்கு திமுக அரசே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!