News March 16, 2025
முறைகேடு விசாரணை உறவுக்காரர்கள் கையில்: விஜய்

<<15777897>>டாஸ்மாக் <<>>முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் (பாஜக), இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் (திமுக) மட்டுமே வெளிச்சம் என்று விஜய் விமர்சித்துள்ளார். முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி என சாடிய அவர், எத்தனை கோடிகளை கொட்டினாலும் திமுகவை 2026இல் மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றார்.
Similar News
News March 16, 2025
AR.ரஹ்மான் குறித்து அப்போலோ அறிக்கை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் தெரிவித்துள்ளது. சில பரிசோதனைகளுக்குப் பின் அவர் வீடு திரும்பினார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 16, 2025
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு – சீமான் கருத்து இதுதான்!

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொதுவெளிக்கு வரும்போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ள அவர், தாம் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக் கூறியுள்ளார்.
News March 16, 2025
ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வருமா?

ஆண்டுதோறும் புனித மாதமாகிய ரம்ஜானில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஒரு மாத நோன்பிற்கு பிறகு பிறை தெரிந்ததும் உற்சாகமாக ரம்ஜானை கொண்டாடி மகிழ்வர். ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வரவும் வாய்ப்புள்ளதாம். 2030ம் ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களில் ரம்ஜான் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன், 1965, 1997 ஆகிய ஆண்டுகளில் 2 ரம்ஜான் கொண்டாடப்பட்டுள்ளதாம்.