News February 16, 2025
மும்மொழிக் கொள்கையின் முரண்

பள்ளிகளில் மாணவர்கள் ஏதேனும் ஒரு மாநில மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்து படிக்கலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், நடைமுறையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தியையே மூன்றாவது மொழியாக தேர்வு செய்கின்றனர். நாடு முழுவதும் இந்தி பரவியிருப்பது, மற்ற மொழிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமை ஆகிய காரணிகள் மற்ற மொழிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியை முதன்மைப்படுத்துகிறது.
Similar News
News November 25, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.
News November 25, 2025
கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம்: ரகுல் ப்ரீத் சிங்

நடிகைகளின் பயணத்தில் திருமணம் என்பது தடைக்கல் அல்ல, அது ஒரு ஊக்கம் தரும் ஏணிப்படிகளே என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை பொறுத்தவரை கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம், அந்த எல்லைகளை திருமணம் தடுக்கவோ குறைக்கவோ முடியாது என்றும் கூறினார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு ரகுல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
News November 25, 2025
உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி: H ராஜா

திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்றே அர்த்தம் என H ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களில் திமுக அரசு சொல்வது அனைத்தும் முழு பொய் என்று சாடிய அவர், திமுகவை தான் நம்பவே மாட்டேன் என்றும் கூறினார். SIR பணிகளால் எந்த ஊழியரும் மன உளைச்சலில் இறக்கவில்லை என்றார். மேலும், உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.


