News October 23, 2024
பட்டாசு விற்பனையை இன்று தொடங்கி வைக்கும் ஆட்சியர்

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News November 22, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, லால்பேட்டை 49 மி.மீ, குறிஞ்சிப்பாடி 44 மி.மீ, பண்ருட்டி 35 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 27 மி.மீ, வடக்குத்து 26 மி.மீ, வேப்பூர் 18 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, கடலூரில் 13 மி.மீ என மாவட்டம் முழுவதும் 439.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை பதிவாகியுள்ளது.
News November 22, 2025
கடலூர்: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
கடலூர்: போலி வழக்கு போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

புவனகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி, பிற மாவட்டங்களில் காணாமல் போகும் நில ஆவணங்களை, லஞ்சம் பெற்று கொண்டு புவனகிரி பகுதியில் தொலைந்தது போல போலி வழக்குகள் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கடலூர் எஸ்பி ஜெயக்குமார் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் டி.ஐ.ஜி-க்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் நேற்று லட்சுமியை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டார்.


