News March 18, 2024

தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

image

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20) மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார்.

Similar News

News December 4, 2025

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்?

image

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது: பாஜக

image

இன்றே தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நயினார் நாகேந்திரன் விரைந்துள்ளார். அப்போது தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

News December 4, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது HAPPY NEWS

image

டிச.12-ம் தேதி விடுபட்ட, தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிச.12-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில், கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!