News July 2, 2024

“மத்திய அரசின் மெத்தனமே மீனவர்கள் கைதுக்கு காரணம்”

image

ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூலை 1) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News September 6, 2025

நெல்லை: வாட்ஸ் அப் மூலம் புதிய மோசடி

image

போக்குவரத்து விதி மீறல் இ-லான் மோசடி தற்போது வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. போக்குவரத்து விதிகள் மீறியதாக அபராதம் செலுத்த வேண்டும் என ஒரு ‘ஏபிகே’ கோப்பிற்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. இது போலியான ஒரு செயலியாகும். அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் போக்குவரத்து அபராதங்களை சரி பார்க்க வேண்டும் என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. SHARE IT

News September 6, 2025

நெல்லை: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!