News September 24, 2025

மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

image

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 24, 2025

மக்கள் நன்மையடைவதை CM விரும்பவில்லை: தமிழிசை

image

மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க காசு இல்லை, ஆனால் பேனாவுக்கு சிலை வைக்க காசு இருக்கிறதா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், GST வரி குறைப்பை பாராட்ட CM ஸ்டாலினுக்கு மனமில்லை என சாடினார். மக்களுக்கு நல்லது நடப்பதை CM ஸ்டாலின் விரும்பவில்லை என கூறிய அவர் மக்கள் சார்ந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 24, 2025

தாமதமான நீதியின் கொடுமை..

image

1986-ல் ம.பி., EB Bill Assistant ஜகேஷ்வர் ₹100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-ல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப். 9-ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடிவிட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!

News September 24, 2025

வான் படையின் சீனியர் வீரனுக்கு ஓய்வு

image

6 தசாப்தங்களாக இந்திய விமானப்படையில் பணியாற்றிய MiG-21 ரக சூப்பர் சோனிக் போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள பிரியாவிடை நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ஏபி சிங் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய தயாரிப்பான MiG-21 கடந்த 1963-ல் படையில் சேர்க்கப்பட்டது. 1965 முதல் இந்தியாவின் அனைத்து போர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.

error: Content is protected !!