News April 16, 2024

கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

image

வெளிநாடுகளுக்கு 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்க வேண்டுமென இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதே வேளையில், ஆலைகளில் அதிகப்படியாக இருப்பில் உள்ள கரும்புச்சாறை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்த அனுமதி அளிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பு பருவத்துக்கான சா்க்கரை உற்பத்தி மார்ச்சில் 3 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

Similar News

News December 4, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 5412 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News December 4, 2025

சரியான Moisturizer-ஐ தேர்வு செய்வது எப்படி?

image

குளிர்காலத்தில் Moisturizer பயன்படுத்துவது அவசியம். ஆனால் உங்களுக்கான சரியான Moisturizer எது என தெரியவில்லையா? கவலை வேண்டாம். உங்களுக்கு Oily skin இருந்தால் Gel based moisturizer-ஐ தேர்வு செய்யுங்கள். Dry Skin இருந்தால், Cream base-ல் இருக்கும் Moisturizer-ஐ பயன்படுத்தலாம். ஒருவேளை கலவையான சருமம் இருந்தால் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட Moisturizer-ஐ தேர்ந்தெடுக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News December 4, 2025

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்?

image

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!