News April 27, 2024
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ₹38,000 கோடி கேட்கப்பட்ட நிலையில், ₹276 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார். தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் பார்க்கும் மத்திய அரசு, யானை பசிக்கு சோளப்பொரிபோல நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நிதி பகிர்வு சீராக இல்லை எனவும் சாடினார்.
Similar News
News November 18, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
News November 18, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
News November 18, 2025
எதிர்க்கட்சித் தலைவரானார் தேஜஸ்வி யாதவ்

பிஹார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்க, மொத்தமுள்ள தொகுதிகளில் 10%-க்கு மேல் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில், 143 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களில் RJD வெற்றிபெற்றிருந்தது.


