News April 25, 2024
மண்ணெண்ணெய் தருவதை மத்திய அரசு குறைத்துவிட்டது

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்து வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், 2021இல் 8500 கிலோ லிட்டர், 2022இல் 4500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு, தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினார்.
Similar News
News January 23, 2026
இனி Wifi வேகம் அதிகரிக்கும்!

இந்திய தொலைத்தொடர்புத் துறை, மே 2025ல் 6 GHz அலைவரிசையில் 500 MHz அலைக்கற்றையை Wi-Fi சேவைகளுக்காக பொது பயன்பாட்டிற்கு விடுவிப்பதாக முன்மொழிந்தது. இந்நிலையில், 6 GHz Wi-Fi பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் Wifi வேகம் அதிகரிக்கும். மேலும், இதை உபயோகிக்க உரிமம் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
News January 23, 2026
ஜனவரி 23: வரலாற்றில் இன்று

*1897 – சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள். *1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. *1973 – அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமுடன் சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தார். *2004 – மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. *2005 – ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.
News January 23, 2026
ஆளுநர் உரை நடைமுறையை நீக்க வேண்டும்: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டைப் போல கேரளா, கர்நாடகாவிலும் ஆளுநர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். மாநில அரசு தயாரிக்கும் உரை படிக்க மறுப்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


