News February 24, 2025
USAன் ₹825 கோடிக்கு கணக்கு காட்டிய மத்திய அரசு

USA அரசுடன் இணைந்து $750 மில்லியன் மதிப்பிலான 7 திட்டங்கள் 2023-24ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு USA அரசு ₹825 கோடி நிதி வழங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USA நிதி வழங்கியதாக டிரம்ப் கூறியது சர்ச்சையான நிலையில், அப்படியெல்லாம் இல்லை என அறிக்கை மூலம் அரசு விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News February 24, 2025
3 பெண்கள் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

தருமபுரியில் தனியார் <<15565302>>பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில்<<>> இறந்தவர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறிய அவர், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
News February 24, 2025
நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
News February 24, 2025
ரூ.2000 வந்தாச்சு… உடனே செக் பண்ணுங்க

விவசாயிகளுக்கான PM Kisan உதவித் தொகையின் 19-வது தவணையை, இன்று பிஹாரில் பாகல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற தகுதியான விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்கில் KYC கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். உங்கள் கணக்கை உடனே செக் பண்ணுங்க.