News June 22, 2024

இன்டர்போல் உதவியுடன் நடக்கும் வழக்கு விசாரணை

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ‘இன்டர்போல்’ போலீசார் உதவியுடன் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில், கனகராஜிக்கு ஏழு எண்ணில் தொடங்கும் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. யார்? எதற்காக? அழைத்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

Similar News

News November 16, 2025

போதைப்பொருள் விவகாரத்தில் அடிபடும் ‘காஞ்சனா 4’ நாயகி

image

மும்பை போலீஸ் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தது. அதில் ‘காஞ்சனா 4’ நாயகி நோரா பதேகி பெயர் அடிப்பட்டது. ஆனால், இதில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் பார்ட்டிக்கு போவதில்லை, வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்களின் வியூவ்ஸ்களுக்காக தனது பெயரை பயன்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

News November 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 521 ▶குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ▶பொருள்: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

News November 16, 2025

2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

image

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.

error: Content is protected !!