News April 29, 2024
கொடநாடு வழக்கு; விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவை ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையை, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க சிபிசிஐடி அவகாசம் கோரியிருந்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Similar News
News August 18, 2025
ராசி பலன்கள் (18.08.2025)

➤ மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சுகம் ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – கவனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சிரமம் ➤ துலாம் – ஊக்கம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – இரக்கம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 18, 2025
வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!