News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

SIR-க்கு ஆதரவாக பாஜக, அதிமுக பேசிவரும் நிலையில், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக கூறி, தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, SIR பணிகளால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக விஜய் கூறியிருந்தார்.
News November 24, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்: வங்கதேசம்

மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக, வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்தக் கோரி, முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே, தீர்ப்பை அடுத்து ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என இந்தியா கூறியிருந்தது.


