News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மிரட்டும் மழை.. 15 மாவட்டங்களுக்கு அலர்ட்

தமிழகத்தின் 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, செங்கை, காஞ்சி, விழுப்புரம், அரியலூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமுடன் இருங்கள். உங்கள் பகுதியில் மழையா?
News December 16, 2025
ரெட் கலர் கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி வந்தார் தெரியுமா?

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் சிவப்பு நிற ஆடையில் இருக்கிறார் தெரியுமா? சாண்டா கிளாஸ், பச்சை, பிரவுன் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருந்த நிலையில், 1931-ம் ஆண்டு கோக கோலா, விளம்பரத்திற்காக சாண்டா கிளாஸுக்கு ‘ரெட்’ கலரில் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கியது. இதன்மூலம், அவர் உலகம் முழுவதும் புது அடையாளத்தை பெற்றார். அந்த சாண்டா கிளாஸை தான் இன்று நாம் பார்க்கிறோம்.
News December 16, 2025
ஆஸி., படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் இந்தியரா?

ஆஸி.,யில் யூதர்களை குறிவைத்து <<18568504>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய சஜித் அக்ரம், ஐதராபாத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 1998-ல் ஆஸி.,க்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஐரோப்பிய பெண்ணை மணமுடித்துள்ளார். மேலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் சென்று, அங்கு ஆயுத பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


