News February 15, 2025

வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

image

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

MGR, ஜெ., போல விஜய்யை CM ஆக்குவார்: ஆதவ் அர்ஜுனா

image

தமிழகத்தில் ஊழலில்லாத, நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்க <<18401023>>செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க உதவியது போல விஜய்யை CM ஆக்க செங்கோட்டையன் துணை நிற்பார் என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் இணைந்து ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 27, 2025

WPL: ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மா ஏலம்

image

WPL ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர்
தீப்தி சர்மாவை ₹3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் வாங்கியுள்ளது. அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியாக RTM வாய்ப்பை பயன்படுத்தி தீப்தி சர்மாவை UP வாரியர்ஸ் தட்டித் தூக்கியது. ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங்கையும் ₹1.9 கோடிக்கு UP வாரியர்ஸ் ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸில் இணைந்துள்ளார்.

News November 27, 2025

ஆதார் குடியுரிமைக்கான சான்று கிடையாது: SC

image

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SIR-க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் SC கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடிமக்கள் சலுகைகளை பெறுவதற்கான ஆவணம் மட்டுமே. ஒருவருக்கு ரேஷன் வாங்குவதற்காக ஆதார் வழங்கினால், வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வரும் டிச.1-க்குள் TN அரசு தாக்கல் செய்த மனுவிற்கு ECI விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!