News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் காங்.,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தி வரும் திமுக, மறுபுறம் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்., கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு, நாளை மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளது. எவ்வளவு தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை இறுதி செய்ய, காங்., தீவிரமாக இறங்கியுள்ளது.
News December 2, 2025
$679 பில்லியனுக்கு ஆயுத விற்பனை

ரஷ்யா-உக்ரைன், காஸா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் ஆயுதங்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. ஆயுத தயாரிப்பு மற்றும் ராணுவ சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் கடந்த ஆண்டு 5.9% அதிகரித்துள்ளது. குறிப்பாக $679 பில்லியன் அளவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. Hindustan Aeronautics, Bharat Electronics, Mazagon Dock Shipbuilders ஆகிய IND நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய் 8.2% அதிகரித்துள்ளது.
News December 2, 2025
வேண்டுதலுக்காக தலையில் தீபம் ஏற்றும் பக்தர்கள்!

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயிலில் எங்குமில்லாத வகையில் சிறப்பு வழிபாடு முறை ஒன்று உள்ளது. இங்கு பக்தர்கள் தங்களது உச்சந்தலையில் விளக்கை ஏந்தியபடி வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். மனக்குழப்பம், கிரக தோஷம் உள்ளவர்கள் நெய் தீபங்களை ஒரு தட்டில் வைத்து, அதை தலையில் வைத்துக் கொண்டு பூஜை நேரத்தில் வழிபடுகின்றனர். பூஜை முடியும் வரை தீபங்களை கீழே வைக்க மாட்டார்கள்.


