News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
மின்சார பஸ்களால் அரசுக்கு நஷ்டமா? அமைச்சர் விளக்கம்

மின்சார பஸ்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கியதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மின்சார பஸ்ஸின் விலை அதிகம் என்பதால் தனியார் மூலம் கொள்முதல் செய்ததாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை என்ற புரிதல் இல்லாமல் அதிமுக பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 29, 2025
GMail-ல் தப்பா மெயில் அனுப்பிட்டீங்களா? இதோ Solution

GMail-ல் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்யமுடியும். இதற்கு, ➤Desktop-ல் உள்ள Gmail-ஐ Login பண்ணிக்கோங்க ➤Settings ஆப்ஷனுக்கு சென்று, General Settings-ஐ க்ளிக் செய்யவும் ➤அதில் ‘Undo Send’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதில் 30 Seconds என டைம் செட் பண்ணிக்கோங்க. இவ்வாறு செய்தால், நீங்கள் தவறாக அனுப்பிய மெயிலை Undo செய்ய உங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். பலருக்கும் பயனளிக்கும், SHARE THIS.
News October 29, 2025
சற்றுமுன்: வெள்ளி விலை மீண்டும் ₹1,000 உயர்ந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(அக்.29) மீண்டும் ₹1,000 உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹166-க்கும், பார் வெள்ளி ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் சரிந்து வந்த வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெள்ளி விலை உயர்வால் அதில், முதலீடு செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து?


