News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
எனக்கு பதவி, பொருள் ஆசை இல்லை: திருமா

கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசை கண்டித்து, விசிக நடத்திய போராட்டங்களை போல எந்த கட்சியினரும் நடத்தவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக மக்களை மறந்து, தனது நலன்பற்றி ஒருபோதும் யோசித்தது இல்லை என்றும் அவர் கூறினார். 10 சீட் கூடுதலாக கேட்டு வாங்குவதால் புரட்சி ஏற்படப் போவதில்லை என்று கூறிய அவர், தனக்கு பதவி, பொருள் ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடர காரணம் என்று குறிப்பிட்டார்.
News December 21, 2025
மீண்டும் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

<<18568504>>ஆஸி., துப்பாக்கிச்சூட்டின்<<>> அதிர்ச்சி அடங்குவதற்குள், தெ.ஆப்பிரிக்காவில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள பெக்கர்ஸ்டல் பகுதியில், மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில், 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது, தெ.ஆப்பிரிக்காவில் 15 நாள்களில் நடைபெறும் 2-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.
News December 21, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக செயல் தலைவர் நிதின் நபினை சந்தித்த பிறகு NR காங்கிரஸ், NDA கூட்டணியில் தொடர்வதாக CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு பிரச்னை ஆகியவற்றால் அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமி NDA கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், இன்று கூட்டணியை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


