News February 15, 2025
வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
Flat, ₹37,000 சம்பளத்துடன் வேலை கொடுக்கும் பாட்டி

தன்னையும், தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகளையும் கவனித்துக் கொள்வதற்கு சீன மூதாட்டி அளிக்கும் ஆஃபர் சற்று மலைக்க வைக்கிறது. ஒரு ஃபிளாட் உடன் தேவையான பொருள்கள், மாதம் ₹37,500 சம்பளத்துடன், பெண் ஒருவரை மூதாட்டி தேடுகிறார். மூதாட்டி ஆஸ்துமா நோயாளி என்பதால், இப்படி ஒரு ஆஃபரை அளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதேநேரம், மூத்த மகள், தாய் & சகோதரியை கவனிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
News November 28, 2025
கொலஸ்ட்ரால் பிரச்னை வரக்கூடாதா? இத பண்ணுங்க

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எண்ணெயும் சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஆலிவ் ஆயில்: ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்திருக்கிறதாம். நல்லெண்ணெய்: இதய நோயாளிகள் மற்றும் உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு சிறந்ததாம். கடலை எண்ணெய்: வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
News November 28, 2025
BREAKING: திமுக அமைச்சர் விடுவிப்பு

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், வருவாய்க்கு அதிகமாக ₹1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது. இதில் அவரது தாயார், மனைவி, மகன், மைத்துனர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாக கூறி, இவ்வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் ரத்து செய்துள்ளது.


