News April 5, 2025

ரேப் செய்துவிட்டு ரூ.100 கொடுத்த கொடூரம்

image

பிஹார், லக்கிசராயில் ரயிலில் சென்று கொண்டிருந்தார் 18 வயது இளம்பெண். அவர் முகவாட்டத்தை அறிந்த ஒருவன், மெல்ல பேச்சுக்கொடுத்து, அவர் வேலைத் தேடுவதை அறிந்தான். பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறிய அந்நபர், கியூல் என்ற ஸ்டேஷனில் இறங்க வைத்துள்ளான். அங்கே அவனது கூட்டாளிகள் 7 பேர் வந்துசேர, அப்பெண்ணை கேங் ரேப் செய்துவிட்டு, கையில் ரூ.100-ஐ திணித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். நாடு எங்கே போகிறது?

Similar News

News October 25, 2025

சிட்னி கிரவுண்டும்.. Hitman ரெக்கார்டும்!

image

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?

News October 25, 2025

நோயில்லா வாழ்க்கை வாழ…

image

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.

News October 25, 2025

BREAKING: இடத்தை மாற்றினார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய்க்கு இதுவரை யாரும் இடம் தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறவிருப்பதாக செய்தி வெளியானது. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், பனையூருக்கு பதில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் அக்.27-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார்.

error: Content is protected !!