News February 17, 2025

அன்றே சொன்ன அண்ணா..!

image

மும்மொழிக் கொள்கையுடன் NEPஐ ஏற்றால் தான், TNக்கு நிதி என மத்திய அரசு கூறிய நிலையில், அண்ணாவின் பேச்சை பலரும் SM-இல் பகிர்கிறார்கள். ”சீனா படையெடுத்தபோது ஹிந்தியில் பேசியா நாம் ஒன்றுபட்டோம்? 3 மாதங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் தான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. ஆனால், 30 ஆண்டுகளாக தமிழ் படித்தும் ஒருசில இடங்களில் பொருள் விளங்கவில்லை என அறிஞர்களே கூறுகிறார்கள்’’ என்பது அண்ணாவின் கருத்து.

Similar News

News December 9, 2025

இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

image

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News December 9, 2025

RO-KO நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை: அஸ்வின்

image

2027 ODI உலகக்கோப்பை வரை ரோஹித், கோலி நீடிப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுவதை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். 2 மூத்த வீரர்களும் இன்னும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர்கள் நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை. அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த கிரிக்கெட் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

புத்தர் பொன்மொழிகள்

image

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

error: Content is protected !!