News February 17, 2025
அன்றே சொன்ன அண்ணா..!

மும்மொழிக் கொள்கையுடன் NEPஐ ஏற்றால் தான், TNக்கு நிதி என மத்திய அரசு கூறிய நிலையில், அண்ணாவின் பேச்சை பலரும் SM-இல் பகிர்கிறார்கள். ”சீனா படையெடுத்தபோது ஹிந்தியில் பேசியா நாம் ஒன்றுபட்டோம்? 3 மாதங்களில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் தான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. ஆனால், 30 ஆண்டுகளாக தமிழ் படித்தும் ஒருசில இடங்களில் பொருள் விளங்கவில்லை என அறிஞர்களே கூறுகிறார்கள்’’ என்பது அண்ணாவின் கருத்து.
Similar News
News November 13, 2025
மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி

மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க SC அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கு எதிராக <<18274994>>தமிழ்நாடு<<>> கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது என்று SC தெரிவித்துள்ளது. அறிக்கை தயார் செய்த பின், TN அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் எனக்கூறியுள்ள SC, ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
News November 13, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 55 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி (DA), மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய செய்தியை SHARE செய்யுங்கள்.
News November 13, 2025
திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? KN நேரு

SIR படிவங்களை, திமுகவினர் மக்களிடம் அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் BLO-க்கள் (Booth Level Officer) செல்வதில் என்ன தவறு என்று KN நேரு கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், திமுக ஐடி விங் பணியாளர்களும் SIR விண்ணப்பங்களை வழங்குவது என்பது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


