News August 10, 2024
டாப்ஸியை துபாயில் விற்க முயன்ற காதலன்?

காதலன் மத்தியாஸ் போ துபாய்க்கு அழைத்த போது, அவர் என்னை அங்கு விற்று விடுவார் என தோழிகள் பயமுறுத்தியதாக நடிகை டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். துபாயில் வசிக்கும் தோழியின் அக்கா ஒருவரின் நம்பரை கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறதாகவும், அதன்பின் பல வருடங்கள் காதலித்த பின்னரே இருவரும் கரம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 3, 2025
ஜெயிலர் 2-ல் இணைந்த மாஸ் வில்லன்

ரஜினியின் ‘ஜெயிலர்’ வெற்றி பெற்றதில், வில்லனாக (வர்மன்) நடித்திருந்த விநாயகனுக்கும் முக்கிய பங்குண்டு. முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், ஜெயிலர் 2-விலும் வர்மன் கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் படக்குழு விதித்துள்ள கட்டுப்பாட்டால், அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.
News December 3, 2025
மகாத்மா காந்தி பொன்மொழிகள்!

*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. *கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.
News December 3, 2025
கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.


