News August 8, 2024
தோழிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சிறுவன் கைது

டெல்லியின் நஜாப்கர் பகுதியில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பெண் தோழியின் பிறந்தநாளில் அவருக்கு ஐஃபோன் பரிசளிக்க தனது தாயின் நகைகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தாயின் நகைகளை அருகில் உள்ள 2 வெவ்வேறு கடைகளில் விற்று, அந்த பணத்தில் பெண் தோழிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்தது அம்பலமானது. தொடர்ந்து, நகைகளை மீட்ட போலீசார், திருட்டு நகை வாங்கிய கடைக்காரர்களை கைது செய்தனர்.
Similar News
News September 16, 2025
MGR படத்தை பயன்படுத்த ADMK-க்கு மட்டுமே உரிமை: KTR

MGR போட்டோவை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்கிறது; புதிதாக வரும் கட்சிகள் MGR போட்டோவை பயன்படுத்தி, அவரது புகழை திருட பார்ப்பதாக விஜய் மீது ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல, காட்டாறு போல ஓடும் கூட்டம். அவருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. அவர் 3-வது அணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
News September 16, 2025
நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 16, 2025
மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.