News June 29, 2024
ரயிலில் கழன்று சென்ற பெட்டிகள்

எர்ணாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், கேரளாவின் வள்ளத்தோடு ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயிலின் பெட்டிகள் கழன்று தனியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மிதமான வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால், பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானகவே நின்றது. பின்னர் மற்றொரு ரயில் என்ஜினுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டு புறப்பட்டு சென்றது.
Similar News
News September 19, 2025
12வது தேர்ச்சி போதும்.. ₹35,000 சம்பளத்தில் வேலை!

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 1,017 Ground Staff பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 30 வயதுக்குட்பட்ட 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹25,000- ₹35,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு <
News September 19, 2025
ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் SA சந்திரசேகர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், MS பாஸ்கர், செந்தில், புகழ், நடிகைகள் நளினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
News September 19, 2025
திமுக கூட்டணியில் உருவான சலசலப்பு!

2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு, ஆட்சியிலும் பங்கெடுப்போம் என KS அழகிரி கூறிய கருத்து DMK கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது என எதிரணியினர் கடுமையாக சாடி வருகின்றனர். முன்னதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும், அறிவாலயம் அமைதி காத்து வருகிறது. உங்கள் கருத்து?