News March 28, 2024
பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள்

மும்பை அணியின் பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். SRH அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய அவர், “பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த ஆடுகளம், பவுலிங்கிற்கு கடினமாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்” என்றார்.
Similar News
News April 21, 2025
நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை

நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெனியூ மாகாணத்தில் கால்நடை மேய்ப்பர்கள், விவசாயிகள் இடையே கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்தவ மதத்தினர் விவசாய தொழிலிலும், கால்நடை மேய்க்கும் தொழிலில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 56 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
News April 21, 2025
BREAKING: மும்பை அணியிடம் வீழ்ந்தது CSK

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(53), ஷிவம் துபே (50) அரைசதம் அடித்தனர். தொடந்து ஆடிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அரைசதம் அடித்த ரோஹித்(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்ததால் ஃப்ளேஆஃப் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
News April 21, 2025
31 பந்துகளில் அரைசதம்.. ரோஹித் மீண்டும் அதிரடி

நடப்பு சீசனில் தொடர்ந்து தடுமாறி வந்த ரோஹித்
சர்மா சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக பெற்று தந்த ரோஹித் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தார். இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த அவர் இன்றைய போட்டியில் பேட்டால் பதில் அளித்துள்ளார். ரோஹித் 31 பந்துகளை அரைசதம் அடிக்க, மும்பை அணி 13 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்துள்ளது.