News June 14, 2024
காலை 9.30 மணிக்கு கொச்சி கொண்டு வரப்படும் உடல்கள்

குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப் படையின் விமானம் குவைத் சென்றது. இந்த நிலையில் 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்கள், இன்று காலை 9.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் 31 பேரின் உடல்கள் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
Similar News
News September 6, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டது. ஆனால், புழக்கத்தில் இருந்தவற்றில் ₹5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். சென்னை RBI அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையத்திலும் மாற்றலாம்.
News September 6, 2025
ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது… இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே, இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News September 6, 2025
அம்பேத்கரின் நினைவுகளால் நெகிழ்ந்த ஸ்டாலின்

லண்டனில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்தை CM ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தந்தை பெரியாருடன் அம்பேத்கர் உரையாடும் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்ததாகவும் CM பதிவிட்டுள்ளார். சாதியால் ஒடுக்கப்பட்ட அம்பேத்கரின் வாழ்க்கை மாறிய இடத்தை பார்க்க பெருமையாக இருப்பதாகவும், தன்னை இது மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் CM செவ்வணக்கம் செலுத்தினார்.