News April 23, 2025
அப்பாவிகள் சிந்திய ரத்தம்… சூழும் போர் மேகங்கள்

தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு அப்பாவி சுற்றுலா பயணிகள் ரத்தம் சிந்தியுள்ளனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது. தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க உறுதி கொண்டுள்ள இந்தியா மீண்டும் எல்லை தாண்ட தயங்காது. PM மோடி, அமித் ஷா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
Similar News
News February 7, 2026
அறுபடை வீடுகளுக்கும் செல்வாரா PM மோடி?

மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்கவுள்ளார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக நயினார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அறுபடை வீடுகளுக்கும் PM மோடி சென்று தரிசனம் செய்துவிட்டு, கோயில் நிர்வாகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அவர் பார்க்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News February 7, 2026
10th Pass போதும்.. ₹28,000 சம்பளம்: APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10th, ஐடிஐ. வயதுவரம்பு: 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. சம்பளம்: ₹28,000 வரை கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <
News February 7, 2026
இந்தியா – அமெரிக்கா இடையே புதிய அத்தியாயம்: PM மோடி

‘வளர்ந்த பாரதம் 2047’ உருவாக்கும் புதிய ஒப்பந்தங்கள் இந்தியா – USA இடையே கையெழுத்தாகியுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள், MSME, ஸ்டார்ட்அப், மீனவர்கள் என பலருக்கும் வாய்ப்புகளை அள்ளித் தரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவில் முதலீடுகள் குவிய வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


