News April 23, 2025

அப்பாவிகள் சிந்திய ரத்தம்… சூழும் போர் மேகங்கள்

image

தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு அப்பாவி சுற்றுலா பயணிகள் ரத்தம் சிந்தியுள்ளனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது. தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க உறுதி கொண்டுள்ள இந்தியா மீண்டும் எல்லை தாண்ட தயங்காது. PM மோடி, அமித் ஷா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

Similar News

News November 20, 2025

ஆம்ஸ்ட்ராங் வழக்கு; CBI-க்கு இடைக்கால தடை

image

ஆம்ஸ்ட்ராங் வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டதை எதிர்த்து TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்திருந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றியது சரியானது அல்ல அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வழக்குகளையும் CBI-க்கு ஏன் மாற்ற வேண்டும் என கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு CBI விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

News November 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 20,கார்த்திகை 4 ▶கிழமை:வியாழன் ▶நல்ல நேரம்: 10.30 AM – 12.00 AM ▶ராகு காலம்: 1.30 PM – 3.00 PM ▶எமகண்டம்: 6.00 AM – 7.30 AM ▶குளிகை: 9.00 AM – 10.30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: ▶ரேவதி சிறப்பு : குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு : தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

News November 20, 2025

ஜி-20 மாநாடு: நவ.21-ம் தெ.ஆப்பிரிக்கா செல்லும் PM

image

20-வது ஜி-20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் வரும் நவ.22-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்க PM மோடி வரும் நவ.21-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளார். மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த பயணத்தில் இந்தியா – பிரேசில் – தெ.ஆப்பிரிக்கா தலைவரின் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!