News September 6, 2025

அமைதி காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்

image

செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து <<17629139>>EPS நீக்கினார்<<>>. இதனால் அரசியல் களம் பரபரப்பில் இருந்தாலும், கட்சித் தொண்டர்கள் அமைதியாகவே உள்ளனர். வெளியிலுள்ள அதிருப்தியாளர்களை தவிர்த்து, அதிமுக முக்கிய தலைவர்களும் அமைதி காக்கின்றனர். கட்சிக்குள் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனில், செங்கோட்டையன் முடிவு என்னாகும்? உங்கள் கருத்து?

Similar News

News September 6, 2025

கணவன் – மனைவி சண்டையை தவிர்க்கணுமா? இத பண்ணுங்க

image

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. எல்லாம் சரியாக தான் இருக்கிறது, சரியாகத் தான் நடந்து கொள்கிறேன்… ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று கவலைக் கொள்பவரா நீங்கள்? வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியா கொடுக்கலாமே.

News September 6, 2025

BREAKING: சீனாவை பந்தாடிய இந்தியா… பைனலில் நுழைந்தது

image

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீன அணியை துவம்சம் செய்தது. ராஜ்கிர் நகரில் நடந்த போட்டியின் ஆரம்பத்திலேயே அமரக்களமாக தொடங்கிய இந்திய முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மேலும் 4 கோல் அடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. நாளை (Sep 07) இறுதிப்போட்டியில் தென்கொரியாவுடன் மோதுகிறது டீம் இந்தியா. வாழ்த்தலாமே.

News September 6, 2025

BREAKING: அதிமுகவில் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா

image

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்த EPS-ன் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று ஒரேநாளில் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல நிர்வாகிகள் தனித்தனியாக கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வருகிறார்களாம்.

error: Content is protected !!