News April 15, 2025

ஐநாவில் சட்டமேதையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

image

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.

Similar News

News November 22, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

image

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

News November 22, 2025

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

image

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 22, 2025

இப்படியும் சில பிள்ளைகள்.. பெற்றோர் ஜாக்கிரதை!

image

ஆரணி அருகே அம்மாவின் நகைகளைத் திருடி தனது பெண் தோழிகளுக்கு செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஊர் சுற்றிவந்த +2 மாணவனின் செயலால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிலிருந்து 2.5 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது இது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பெற்றோர் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!